ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஏழாம் அறிவும்-தமிழனும். உதய நிதிக்கு தங்கர்பச்சான் எழுதிய கடிதம்.

  தங்கர்பச்சான் எழுதிய கடிதத்தை இங்கு எழதும் முன்பு ஒரு செய்தியை சொல்லிவிடுகிறேன்.  ஏழாம் அறிவு திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு இடத்தில் கூட தமிழன் என்ற வார்த்தை உச்சரிக்கபடவில்லை என்று எனது நண்பர்கள் மற்றும் முக நூல் மூலம் அறிந்தேன். தமிழன் என்ற உணர்ச்சியை தூண்டிவிட்டு வியாபாரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.  உண்மையாகவே தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டுமெனில் இங்கு பயன்படுத்திய அதே வசனத்தை அந்த மொழியிலும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கும் நம்மை பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். மேலும் தங்கர்பச்சான் எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் சொல்லிவிட்டேன் என்கிறார். உங்களுக்கு அந்த படைப்பாளிகளிடம் சொல்வதற்கு வாய்ப்பு உண்டு எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாததினால் இப்படி வலைப்பதிவில் சொல்கிறோம்.


தங்கர்பச்சானின் கடிதம்

    நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை.இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே..இன அறிவோ,மொழி அறிவோ,அரசியல் அறிவோ,நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ,பெற்றோர்களோ,ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை.பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது.இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்ப் படுத்திவிட்டார்கள்.
கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும்,அரசியலையும் ,மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும்.இதைப்பற்றி எதையும் பேசாத,வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன.அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி,தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல்,பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்.தமிழை தங்களின் சொந்த நலனுக்காக,அதிகாரத்துக்காக,பயன்படுத்தியவர்களைப ் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ!இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம்.தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும்,ஏளனத்தையும், கூச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது.அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.
நம் வரலாற்றை,அறிவியலை,மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும்,இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி.தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது.அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன்.எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும்,ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன.seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை.திறனாய்வு செய்தால் என் அழகியும்,பள்ளிக்கூடமும்கூட நிற்காது.மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும்.எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன்.நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன.எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும்.நம் கலாச்சாரத்தையும்,பண்பாட்டுக் கூறுகளையும்,நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும்,தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ்,சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே.நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன்.அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
தாய் மண்,தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது.தமிழை நம்பியோ,தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான்.ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான்.உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம்.தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும்,படத்தை வாங்கியவர்களுக்கும்,திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும்,கவலையும்.ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும்,எவ்வளவு பணம் கிடைக்கும்,வெற்றியா,தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன்,ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.
--
அன்போடு
தங்கர் பச்சான்




வெள்ளி, அக்டோபர் 28, 2011

ஏழாம் அறிவு- விமர்சனம்



ஹிப்னாட்டிசம் (நோக்குவர்மம்) என்ற ஒரு கலையினால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையில், எவ்வளவோ சூழ்னிலை அமைந்தும் சூர்யாவையும், ஷ்ருதியையும், கொல்ல வரும் ஹிப்னாட்டிசம் கலையை முழுமையாக கற்ற வில்லனால் முடியவில்லை என்ற ஒரே ஒரு லாஜிக் மீறலே படத்தினை பார்த்து,  ரசிப்பதற்கு பதிலாக பார்க்க மட்டுமெ முடிகிறது.

மேலும் எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவரான ஏ,ஆர்.முருகதாஷ், படம் வெளிவருவதற்கு முன்னால்அளித்த பேட்டியும், அவரின் அதிகமான தன்னம்பிக்கையும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய அளவிற்கு, அவருடைய திரைக்கதை என்னைப் போன்ற சாதரன ரசிகனும் யூகிக்க கூடியதாக இருப்பதனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.  தேவை இல்லாமல் இடையிடையே செருகப்பட்ட பாடலும் திரைக்கதைக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

 ஆனால், நம்மில் அதிகம்பேர் அறியாத போதிதர்மன் என்கின்ற தமிழரைப் பற்றி அறிமுகப்படுத்தியதற்கு இயக்குனர்க்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்.

  போதிதர்மனாக வாழ்ந்து தனது நடிப்பில் வெற்றி பெற்ற சூர்யா, சர்கஷ் கலைஞன் அரவிந்த் ஆக தோற்றுவிட்டார்.

மருத்துவ ஆராய்ச்சி மாணவியாக ஷ்ருதி. தமிழயும், தமிழனையும் இழிவாக பேசுபவர்களிடம் கோபப்படும் அந்த காட்சியே போதும் கமலின் வாரிசு என்று நிரூபிக்கிறார். ஆனால் ஷ்ருதி, கமலிடம் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொண்டால் நல்லது. கமல்ஹாசனே ஒரு நிகழ்சியில் தசாவதாரம் படத்தில் எனக்கு ஆங்கிலம் உச்சரிப்பை கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்று பெருமையாக சொன்னார். நீங்கள் தமிழ் ஆசிரியராக மாறுங்கள் கமல்.

   வில்லனாக நடித்து இருக்கும் டோங்க்லீ தமிழ் படத்தில் வரும் வில்லனைப் போல் இல்லாமல் தனது பார்வையாலே மிரள வைக்கிறார்.

   ஹரீஷ் ஜெயராஜ் இசையில் பாடல்களும், பின்னனி இசையும் சுமார் ரகம் தான். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு பாடல்களில் மட்டுமே தெரிகிறது.

  சரி இப்போ படத்தோட கதைக்கு போகலாம்.

5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த, தற்காப்பு கலையிலும், மருத்துவத்திலும் சிறந்து விளங்கிய போதிதர்மனின் வாழ்க்கை குறிப்புடன் படம் தொடங்குகிறது. சீனாவில் அவர் செய்த உதவிகளும், தற்காப்பு கலையும்,சிறுமியின் நோயை குணப்படுத்திய அவருடய மருத்துவ அறிவும் அந்த மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த கலையை அந்த மக்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார். இப்படிப்பட்ட ஒருவன் தங்கள் நாட்டை விட்டு போகக் கூடாது என்பதனால் அவருக்கு விஷம் வைத்து கொல்கிறார்கள். உடனடியாக கதை இந்த காலத்தில் இருந்து தொடர்கிறது.

  பயோ வார் (BIO WAR) மூலம் சீனா இந்தியாவை அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஷ்ருதி, போதிதர்மனின் வாரிசான சூர்யாவின் DNA வைத் தூண்டி அவருடய திறமையை வெளிக்கொண்டுவரும் முயற்சியை அறிந்து அவர்களை கொல்ல டோங்க்லீ என்பவனை சென்னைக்கு அனுப்புகிறார்கள். அவன் சூர்யாவயும்,ஷ்ருதியையும் கொன்றானா அல்லது ஷ்ருதி சூர்யாவின் DNA வைத் தூண்டி அவனையும் சீனாவின் திட்டத்தையும் வென்றார்களா என்று முடிகிறது படம்.

  படதில் வரும் சில வசனங்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நாய்க்கு ஊசி போட்டு நோயை பரப்பும் அந்த காட்சிகளின் பிரமாண்டமும் நம்மை பயமுறுத்துகிறது.

  90 கோடி ரூபாய் வியாபாரத்தை தந்த இந்த படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தமிழின் முக்கியமான படத்தின் வரிசையில் சேர்ந்திருக்கும்.

 ஆனந்த விகடனில் நான் எதிபார்க்கு மதிப்பெண்- 43.

வெள்ளி, அக்டோபர் 21, 2011

புகைப் படம் தந்த பரிசு

                       

                  இந்த பதிவ எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியலயே !

 இலக்கியம், கவிதை, எழுத்து, இசை,  சினிமா, நடனம், புகைப்படம் என அனைத்திலும் ஒரு படைப்பாளியாக இருக்க எனக்கு ஆர்வம் இருந்தாலும்  இவற்றிற்கு தேவையான எந்த  அறிவும் என்னிடத்தில் இல்லை. ஆனால் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான வேகம் உழைப்பு என்னிடத்தில் உண்டு. 

இப்படி கற்றுக்கொள்ள எந்த ஒரு சூழ்நிலையும் அமையவில்லை, நானும் என்னை  நம்பி இருக்கின்ற குடும்பத்திற்காக அமைத்துக்கொள்ள விரும்பவும் இல்லை.  என்னால் ஒரு நல்ல ரசிகனாக மட்டுமே இருக்க முடிகிறது. 

இதில் புகைப்படம் எடுப்பதை தவிர மற்ற அனைத்தும் நீண்ட புத்தக வாசிப்பு மூலமாகவோ அல்லது திறமையான ஆசிரியர் மூலமாகவோ  கற்றுக்கொள்ள முடியும். அதனால் புகைப்படம் எடுக்க தேவையான ஒரு கேமரா வாங்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை சென்ற மாதம் நிறைவேறியது. 


என்னடா இவன் புகைப்படம் தந்த பரிசுனு தலைப்ப வச்சிட்டு எதயோ எழுதுறானு பாக்குறீங்களா, அதான் சொன்னனே  எப்படி ஆரம்பிக்கிறதுனு ?

சரி இப்ப தலைப்புக்கு வரலாம்...................

ஆயிரம் வார்த்தகளால் சொல்ல முடியாத அல்லது எழுத முடியாத ஒரு நிகழ்வை ஒரே ஒரு புகைப்படத்தால் நம்மை உணர வைக்க முடியும். 

இப்படி தான் சொல்ல வந்த கருத்தை இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை எடுத்தவர்க்கும் புரிய வைத்த ஒரு புகைப்பபடத்தின் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் தெற்கு சூடன் விடுதலைப் பெற்று தனி நாடாக அறிவிக்கப்பட்ட செய்தியை படித்தபோது, அங்கு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த ஒரு புகைப்படத்தின் நினைவும் வந்தது.




  நீங்கள் பார்க்கும்  உலகப் புகழ் பெற்ற இந்த புகைப்படம் 1994 ஆம் வருடத்தின் pulitzer  விருது பெற்ற 1993 ஆம் ஆண்டு சூடானில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சூடான் உள்நாட்டு போர் மற்றும் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கி பசியால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருந்த நேரத்தில் ஐ.நா சபையின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட முகாமை  நோக்கி சென்ற ஒரு குழந்தையை தனக்கு உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் பருந்து.

இந்த புகைப்படம்  kevin carter   என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது.

kevin carter  

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து விளையாட்டுதுறை புகைப்படக்காரராக தனது வேலையை தொடங்கிய கெவின். 1993 ஆம் வருடம் ஐ.நா திட்டத்தின் மூலம் சூடனுக்கு உணவு கொண்டு சென்ற விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். 
அப்பொழுது அவர் எடுத்த இந்த புகைப்படம் New York பத்தரிக்கையில் வெளிவந்த சமயம் பல ஆயிரம் மக்கள் அந்த குழந்தையை பற்றி விசாரிக்க தொடங்கினார்கள். ஆனல் அந்த புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கைக்கோ,  புகப்படம் எடுத்த கெவினுக்கோ அந்த குழந்தையைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

இந்த புகைப்படம் வெளிவந்தபோது "st petersburg Times"  என்ற பத்திரிக்கை   "அந்த குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை சரியான ஒரு கோணத்தில் புகைப்படம் எடுக்க தயாரான அந்த புகைப்பட காரனும் ஒரு கொடூர மிருகம் தான்" அந்த காட்சியின் மற்றொரு பருந்து அவர் என்று விமர்சனம் செய்தது.

pulitzer   விருது பெற்றாலும் இந்த புகைப்படத்தால் பல கண்டனங்களுக்கு ஆளானார். இதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு மன உளைச்சல்கள் அதிகரித்தன.

இதன் விளைவாக 1994 ஜூலை 27 ஆம் தேதி தனது காரின் புகை போக்கியில் ஒரு ரப்பர் குழாயை இனைத்து மறுமுனையை காருக்குள் வைத்து பக்க கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கி காதில் walkman ஐ மாட்டிக் கொண்டு உள்ளே அமர்ந்து விட்டார். பின்பு அவரின் உடல் கண்டெடுக்கபட்ட போது கார்பன் மோனாக்சைடினால் இறந்திருக்கிறார் என தெரிய வந்தது.

குற்றயுணர்ச்சியின் மிகுதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்ட
kevin வயது 33. 
pulitzer  விருது பெற்ற இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை.தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.

"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for 

debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and

 pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer 

executioners ...


மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில்

"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I 

may pray that He will protect this little boy, guide and deliver him away from his misery, I pray 

that weDear will be more sensitive towards the world around us and not be blinded be our own 

selfish nature and interests"

சனி, அக்டோபர் 01, 2011

நிறம் மாறிய ரோஜா........ (சிறு கதை)





மாமா நான் ஒன்னு கேக்கட்டுமா?

என்ன வேணும்? என்ன வேணும்? என்று காதல் செய்ய ஆரம்பித்த இந்த ஆறு மாத காலத்தில் கேட்க்கும் போதெல்லாம், எனக்கு  ஒன்னுமே வேணாம் மாமா.
நீ மட்டும் போதும் என்று சொன்ன ரோஜா விடம் இருந்து வந்த இந்த கேள்விகள் பாரதிக்கு புதிதாக இருந்தது.

அமைதியாக இருந்த பாரதியிடம்

என்ன மாமா கேக்கட்டுமா?

என்ன கேக்கப்போற?

கேக்கட்டுமா? வேணாமா?  அத மட்டும் சொல்லு.

ம் ஓகே குட்டி கேளுடி.

நீ என்ன நிஜமாவே லவ் பண்றியா ? கல்யாணம் பண்ணிப்பயா ?

என்னடி லூசு மாதிரி கேக்குற.

நான் கேட்டதுக்கு பதில சொல்லு மாமா.

ஏன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா ?, இல்லையா ?

இருக்கு மாமா.

அப்ரம் எதுக்கு டி இந்த மாதிரி கேள்வி தோணுது.

சரி மாமா நான் கேக்குறேனு தப்பா நினைக்கக் கூடாது.

இப்டி கேக்குறதுக்கு நீ கேக்காமலே இருக்கலாம். சரி கேளு.

ஒரு வேளை நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண முடியாம போனா  என்ன செய்வ மாமா?

என்னடி கேள்வி எல்லாம் வித்தியாசமா  இருக்கு ? என்னை கோபப் படுத்தி பாக்குறியா ?

அதெல்லாம் இல்ல மாமா. நீ இப்ப சொல்லு.  நான் ஏன் ? இப்டி கேட்டேனு கடேசில சொல்றேன்.

சரி நான் என்ன  சொல்வேணு நீ எதிர்பாக்குற ?

அத கடேசில சொல்றேன்.

உன்ன கல்யாணம் பண்றதுக்கு நீ என்னென பிரச்சனை இருக்குனு நினைக்கிறயோ அதை எல்லாம் சால்வ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிப்பேன். நம்பிக்கை தான் டி வாழ்க்கை.

சரி இப்ப சொல்லு ஏன் டி திடீர்னு எம்மேல இப்டி ஒரு சந்தேகம் ?

சந்தேகம் இல்ல மாமா.
காதலனை எப்படி டெஸ்ட் பண்ணுவது ? அப்டினு ஒரு புக் ல படிச்சேன் அதான் கேட்டேன்.

அடிப்பாவி, சரி உன்னோட டெஸ்ட் ல நான் pass ஆயிட்டேனா இல்லை fail அ.

 இப்டி எல்லாம் கேள்வி கேட்கும் போது. உம்மேல சத்தியமா காதலிக்கிறேன். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் இப்டி சொல்றவங்க எல்லாம் பொய்யா லவ் பண்றாங்கனு படிச்சேன்.

அப்போ நான் ?

நீ பாசாயிட்ட மாமா.
நாந்தான் மாமா உனக்கு ஏத்த பொண்ணு இல்லை.

ஏன் டி இப்டி சொல்ற ? நான் வேணும்னா உனக்கேத்தாப்ல மாறிக்கிறேன்.

சும்மாதான் சொன்னேன் நீங்க என்ன சொல்வீங்கனு பாக்குறதுக்கு

good night, sweet dreams  என்று

 தொலைப்பேசி உரையாடலை துண்டித்தாள்.


ஒரு வாரம் கழித்து நண்பனிடம் இருந்து ஃபோன்.

மச்சான் உன் ஆளு ரோஜாவுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்.

அப்போதுதான் பாரதிக்கு புரிந்தது

அன்று கேட்ட கேள்விகள் இந்த செய்தியை தாங்கிக் கொள்ள தயார் படுத்தினாள் என்று.



இது என் முதல் சிறுகதை முயற்சி  ஏதேனும் தவறு இருந்தால் என்னை திருத்தவும்.

நன்றியுடன்
பாலா