புதன், செப்டம்பர் 28, 2011

பணம் காய்க்கும் மரம்

 பாதுகாப்பிற்கு வேலி இல்லை
 தண்ணீர் ஊற்ற ஆளும் இல்லை
 நட்டவனுக்கோ இதனைப் பற்றிய
 கவலை இருந்தும்
ஒன்றும் பயனில்லை.....


 தனக்கான உணவை
 தானே தேடிக்கொண்டு
 வளர்ந்த  மரத்தின் நிழலில்
 கனிகளைப் பறிக்க ஆயிரம்
 சுய நலவாதிகள்.  



வறட்சியால் தன் இலைகள் உதிர்ந்த பின்பும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு கனிகளைத் தருவது போல தனது இன்பத்தை தொலைத்துவிட்டு தன் அப்பா அம்மாவின் சொந்த வீடு கனவு, தம்பியின் படிப்பு, தங்கயின் திருமணம் என்ற சுமைகளைத் தாங்கிக் கொண்டு அவர்களின் பிரிவில் இரவில் தூக்கம் மறந்து பகலில் பணத்தை தேடிக் கொண்டு அலையும் என்னைப் போன்று பணம் காய்க்கும் மரங்களாகவே மாறிவிட்ட வெளிநாட்டில் பணி செய்து கொண்டிருக்கும் மனிதர்களின் துயரத்தை சொல்ல ஒரு சிறு முயற்சி.

மனிதர்களின் கண்களுக்குத்தான் தன்னுடய நிலையை மற்றவர்களுக்கு மிகவும் எளிதாக  உணர்த்தக் கூடிய சக்தி உண்டு.  நான் அதுவரை பார்க்காத ஒரு வித ஏமாற்றம், அழுகை, இந்த வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை என்ற மன நிலையில் மிகவும் சோகமாக இருந்த என் நண்பனைப் நான் கண்ட சில வினாடிகளில் தன் துயரத்தை மறைக்க அந்த இடத்தை விட்டு விலக முயன்றவன் என்னைப் பார்த்தவுடன் ஓ வென்று அழ தொடங்கிவிட்டன்.

நான் ஏன் என்று கேட்டவுடன் அவன் சொல்லிய காரணத்திற்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது.  திருமணத்தில் தான் ஒருவனுடய வாழ்க்கை ஆரம்பமாகிறது. தன் மனைவி  ஆறு மாத கர்ப்பமாக இருந்த பொழுது இங்கு வேலைக்கு வந்தவன் தன் மனைவியின் சந்தோசம், வலி, வேதனை, துக்கம் ஆகிய அனைத்தயும் தனது தொலைப் பேசி உரையாடல் மூலமே தன்னை வருத்திக் கொண்டு மகிழ்ச்சியாக இருதவனுக்கு அன்றய தினம் தன்னுடய குழந்தையின் முதல் அழுகையை கேட்க்க முடியாத ஏக்ககத்தில் தான் அழுதுகொண்டிருந்தான்.  ஆம் அன்றய தினம் அவனுடய மனைவிக்கு பிறசவ நாள்.






செவ்வாய், செப்டம்பர் 27, 2011



நன்றி வினவு வலைப்பதிவிற்கு   www.vinavu.com

கேள்வி :நான் பிறந்தது முதல் கடந்த 27 வருடங்களாக நம் தமிழ் நாட்டில் வசித்துவருகிறேன்….குறிப்பாக வேலை காரணமாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். சமீபத்தில் நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஒரு நாள்நான் தெலுங்கில் பேசிய காரணத்திற்காக என் பக்கத்து அறையை சேர்ந்த சிலஅன்பர்களால் தாக்கப்பட்டேன். என்னை கொல்டி என்றும் வந்தேறி என்றும்அர்ச்சித்து என்னை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் என்னைபற்றி எடுத்து சொன்னேன்…நாங்கள் எப்போதோ நாயக்கர் ஆட்சிக்காலத்தில்குடிபெயர்ந்து கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழர் பண்பாடோடு கலந்து எங்கள் வாழ்கை முறையை கொண்டுள்ளோம் என்றும்…தெலுங்கில் ஒன்றும் எழுதவோ முழுமையாக பேசவோ வாசிக்கவோ தெரியாது…..எனக்கு தமிழ் தான் எல்லாமும் என்று வாதிட்டேன். பயனாக மேலும் இரண்டு குத்துகள் மார்பில் விழுந்தன. நான் என்னை மனப்பூர்வமாக ஒரு தமிழனாகவே கருதுகிறேன். எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி தர்மசங்கடமாகவே உணர்கிறேன். நான் தமிழன்தான் என்பதை மற்றவர்கள் எப்படி உணர்வார்கள்..?என் தாய் மொழி தெலுங்கு என்ற காரணத்திற்காக நான் தமிழில் சிந்திப்பதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? என் கேள்வி இதுதான்…நான் என்னை யாராக நினைப்பது?? இதை பற்றி நியாமான பதிலுக்கு வினவை விட்டால் நாதியில்லை. ஒருவேளை இந்த கேள்வி மிகவும் மொன்னையாகவோ ஒரு சரியான புரிதலுடனோ இல்லாமலிருப்பின் மன்னிக்கவும்.
-       கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.
உங்களை யாராக நினைப்பது என்ற கேள்விக்கு பதில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தமிழன் என்று தைரியமாக சொல்லுங்கள்! இதில் மூடி மறைப்பதற்கோ, தற்காப்பு நிலையில் நின்று பேசுவதோ தேவையில்லை.
தமிழக எல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திர எல்லையில் இருக்கும் மக்கள் தேவை கருதி இப்படி இரு மொழி பயன்பாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நேரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் எல்லைக்கு அந்தப்புறத்திலும், மற்ற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கேயும் வாழவேண்டியிருக்கலாம். எல்லை என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே அன்றி அதுவே எல்லாமும் அல்ல.
பாக் இந்திய எல்லையில் இருக்கும் மக்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்றுதான். இங்கே ஊதிவிடப்படும் தேசபக்தி காய்ச்சலோடெல்லாம் அங்கே  அவர்கள் வாழ முடியாது. அவர்களது கால்நடைகள் எல்லையைத் தாண்டி மேயும். திருமண மற்றும் இதர விசேட நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அடிக்கடி எல்லையை தாண்ட வேண்டியிருக்கும். இருநாட்டு இராணுவங்களில் யார் தாக்கினாலும் அதன் பாதிப்பு இருநாட்டு மக்களுக்கும் உண்டு. எனவே இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தேசபக்தி சாமியாடும் அம்பிகளின் மனநிலைக்கும் எல்லையில் வாழும் அந்த மக்களின் மனநிலைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
எனவே எந்த தேசிய இன மக்கள் வாழும் நாட்டிலும் இது போன்ற வேற்று மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் கூட பெங்களூருவிலோ இல்லை மும்பை தாரவியிலோ, திருவனந்தபுரத்திலோ  மொழிச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இங்கு மற்ற மொழி மக்கள் கேலி செய்யப்படுவது போல அங்கே அவர்கள் மதராசி, பாண்டிக்காரன் என்று கேலி செய்யப்படுகிறார்கள். இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.
மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல நாயக்கர் காலம் போல பல்வேறு வரலாற்றுக் காலங்களினூடாக தமிழகத்தில் பல்வேறு தேசிய இன மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அதில் மராத்தி, கன்னடம், மலையாளம், உருது,  இந்தி என்று பல மொழி பேசுபவர்கள் உண்டு. இந்தியா முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இந்த மொழிக் கலப்பு நடந்திருக்கிறது. இதில் தூய தேசிய ரத்தத்தைக் கொண்ட இனம் என்று எதுவும் இல்லை. எனவே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனத்தில் இருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள ஒன்று. இத்தகைய கலப்பு இன்றி எந்த தேசிய இனமும், மாநிலமும் இல்லை.
நீங்கள் கேரளத்தில் கொல்லம் நகர் வரையிலும் முழுக்க தமிழ் மொழி மட்டுமே கூட பேசி வாழ முடியும். முழு கேரளத்திலும் கூட தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். அதே போல திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தமிழும் முழுப் பயன்பாட்டில் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் வேலூர் வரையிலும் வந்து செல்ல முடியும். கன்னட மொழி பேசும் மக்கள் ஓசூர் வரையிலும் புழங்குகிறார்கள். இவையெல்லாம் யதார்த்தமாக மக்களிடையே தவிர்க்கவியலாமல் இருக்கின்ற மொழிக் கலப்பு அம்சங்கள்.
உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறி வீட்டில் மட்டும் அதுவும் கொச்சைத் தெலுங்கு பேசிவிட்டு, பொதுவெளியில் தமிழராக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் தற்போது கூட ஆந்திராவிலோ, இல்லை கேரளாவிலோ இருந்து மக்கள் இங்கு குடியேறி வாழலாம். தத்தமது தாய்மொழிகளைப் பேசும் மலையாளியாகவோ இல்லை தெலுங்கராகவோ தமிழ்நாட்டில் வாழலாம். இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்தான் வாழ முடியும் என்பது சட்டப்படியும், தார்மீகரீதியாகவும், யதார்த்தமாகவும் சரியல்ல.
இந்தியாவில்  காலனிய ஆட்சிக் காலத்தில்தான் தேசிய இனங்கள் தத்தமது அடையாளங்களோடு தோன்றத் துவங்கியிருந்தது. அவை முழு நிறைவான வளர்ச்சி பெற்ற தேசிய இனங்களாக மாறிக் கொள்வதற்கு காலனிய ஆட்சி தடையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் தமிழன் என்ற உணர்வோ இல்லை நாடோ இங்கு இருந்ததில்லை. சங்ககாலம் தொட்டு தமிழனது அடையாளங்கள் பாடல்கள் மூலம் பேசப்பட்டாலும் அவை இன்றைய தமிழனது தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். இன்றும் தென்கேரள மக்கள் தமிழ் மக்களை பாண்டிக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இன்று நாம் பேசும் பொதுவான தமிழ்மொழி கூட அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பொருளாதாரப் பரிவர்த்தனை காரணமாகவே நாம் பேசும் இன்றைய பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது. இன்றும் கச்சாவான கொங்கு தமிழ், திருவிதாங்கூர் தமிழ், மலைவாழ் மக்களின் தமிழ், சென்னைத் தமிழ் , தெலுங்குத் தமிழ், கன்னடத் தமிழ், மலையாளத் தமிழ் முதலான வழக்குகளை பொதுவான தமிழர்களே புரிந்து கொள்வது கடினம்.
முன்னர் வட்டாரத் தமிழ் வழக்கு மட்டும் பேசி வந்தவர்கள் இன்று உள்ளூரில் மட்டும் அப்படிப் பேசிவிட்டு பிழைக்க வந்த இடத்தில் பொதுத் தமிழை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இப்படித்தான் பத்திரிகைகள், சினிமா, இலக்கியம், அலுவலங்களில் பயன்படும் பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது.
ஆங்கிலேயருக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பொருளாதாரத் தேவையோ, சாத்தியமோ இருந்ததில்லை. ஒரு நபர் என்ன மொழியைப் பேசுகிறார் என்பது அவருடைய சமூக – பொருளாதார வாழ்க்கையே தீர்மானிக்கின்றது. நாமக்கல் லாரி டிரைவர்கள் வட இந்தியாவுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் இந்தி மொழியைக் கற்கின்றனர். பஞ்சாபிலிருந்து இங்கு வரும் சிங் டிரைவர்கள் தமிழைக் கற்கின்றனர். கன்னியாகுமாரியில் மணல், சிப்பி விற்கும் சிறுவன் ஐந்தாறு இந்திய மொழிகளைப் பேசுகிறான். சென்னை அண்ணா சமாதியில் மீன் வருவலை விற்கும் மீனவர் வங்க மொழியை சரளமாகப் பேசுகிறார். மும்பையில் வாழும் பிற தேசிய இன மக்கள் தத்தமது தாய் மொழியோடு மராத்தி, இந்தி, உருதுவை கற்றுத் தேர்கின்றனர். இன்று தமிழகத்தில் அதிகார, நிர்வாக, பொழுது போக்கு துறைகளில் ஆங்கிலம் கோலேச்சுகிறது. ஏழை எளிய மக்கள் கூட சரளமான ஆங்கில வார்த்தைகளை தமது பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இயல்பாகவே இப்படி மொழிக்கலப்பு ஏற்படுவதை, ஏற்பட்டு விட்டதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் பல்வேறு தேசிய இன மக்கள் இப்படி கலந்து வாழும் சூழலை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். சாதிகளுக்குள் சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று விரும்புவது போல தேசிய இனங்களுக்குள்ளும் இனமறுப்பு மணங்கள் நடக்க வேண்டும் என்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம். அப்பா பஞ்சாபியாகவும், அம்மா தமிழாகவும் இருந்தால் பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு, இரு மாநில பண்பாடுகளையும் அறிந்து கொண்டு முன்னோக்கி செல்லும். மக்களிடையே ஒற்றுமை வளரும். இப்படி தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, பீகாரி, உ.பி என எல்லா இனங்களும் கலக்க வேண்டும். நம்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் இப்போது இருக்கும் இனங்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் கலந்து எழும். தூய இனம் என்பதற்கு வரலாற்றில் எதிர்காலமில்லை.
இப்படி மற்ற தேசிய இனமக்கள் தமிழ்நாட்டில் குடியேறினால் தமிழர் வளம் அழியும் என்று தமிழின வெறியர்கள் கூப்பாடு போடுவார்கள். இது உண்மையெனக் கொண்டால் இன்று ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற அகதிகள் அங்கே வாழ்வதால் அந்தந்த நாடுகளின் வெள்ளையர்களுக்கு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அங்கே புதிய நாசிசக் கட்சிகள் தோன்றி ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மற்ற மொழிக்காரர்கள் இருக்க்க் கூடாது என்று பாசிசம் பேசும் தமிழினவெறியர்கள் ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மும்பையில் ஏழை பீகாரிகளை வெறிகொண்டு தாக்கும் சிவசேனா வெறிநாய்களை மனிதநேயம் கொண்டோர் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான் அப்படி ராஜ்தாக்கரேவுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள்  தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?
அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்.
இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள். இதுதான் இவர்களது தமிழ் வீரத்தின் இலட்சணம்.
இதனால் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறை இல்லை என்று பொருளல்ல. பார்ப்பனிய இந்து தேசிய ஒடுக்கு முறையினால் தமிழ் மட்டுமல்ல பிற தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். மொழி, பண்பாடு, கல்வி என்று எல்லாத் துறைகளிலும் இந்த ஒடுக்கு முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை.
எனினும் இந்திய மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது பொது எதிரியை அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதிலேயே வரும். அதை பிரிந்து கொண்டு செய்வதால் பயனில்லை. சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சொல்வதோடு இந்தியாவின் தேசிய இன மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம். அதே போன்று ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மை என்பது அதனுடைய ஜனநாயக விழுமியங்களுக்காகவே போற்றப்படவேண்டும். அவற்றில் இருக்கும் நிலவுடமை பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டும்.
தமிழிசை மரபு, பார்ப்பனிய எதிர்ப்பு மரபு போன்றவைதான் தமிழின் போற்றுதலுக்குரிய மரபுகள். இதைத் தவிர தமிழில் இன்று கோலேச்சுவது சாதிய ஆதிக்கம்தான். தாழத்த்தப்பட்ட தமிழர்களை ஊருக்குள் செருப்போடு செல்லக்கூடாது என்றுதான் ஆதிக்க சாதி தமிழர்கள் நடத்துகிறார்கள். இந்நிலையில் தலித் தமிழன் எங்கனம் தமிழனென்று உணர முடியும்? இப்படி சாதியால் மட்டுமல்ல வர்க்க ரீதியாகவும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். டி.வி.எஸ் அய்யங்காரும், ஸ்பிக் முத்தையா செட்டியாரும், பொள்ளாச்சி மகாலிங்கமும் வேண்டுமானால் முதலாளிகள் என்ற முறையில் தமிழன் என்று பேச முடியும். ஆனால் இவர்களோடு சரிக்கு சமமாக தொழிலாளிகள், நிலமற்ற விவசாயிகள் தமிழனென்று பழக முடியுமா என்ன?
ஆகவே சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கார்த்திகேயன், அதன்படி நீங்கள் உங்களை உழைக்கின்ற வர்க்கமாக நினைத்து வாழுங்கள். உழைக்கும் வர்க்கத்தில் விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் போன்றவர்களோடு இணைந்து எழும் அந்த வர்க்க உணர்வே நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வல்லமையை தரும்.
எனினும் தமிழின வெறியர்களுக்கு எதிர்காலமில்லை என்று நாம் அவரசமாக முடிவெடுத்துவிடக்கூடாது. இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகம் வந்து வேலை செய்கின்றனர். நாளை இவர்கள் இன வேறுபாடு கடந்து தமிழக தொழிலாளிகளோடு சேர்ந்து போராடும் நேரத்தில் முதலாளிகள் இதை திட்டமிட்டு பிரிக்கும் வண்ணம் தமிழின வெறியை தூண்டிவிடலாம். அப்படித்தான் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கங்களை உடைப்பதற்கு முதலாளிகள் சிவசேனாவை வளர்த்து விட்டனர்.
தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் நாம் இனவேறுபாடு இன்றி தொழிலாளிகளை அணிதிரட்டி முதலாளிகளையும் அவர்களது காசில் வரும் தமிழின வெறியர்களையும் வேரறுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். மதவெறி, சாதிவெறிக்கு மட்டுமல்ல இனவெறிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவோம்.

தமிழ்- மொழிப்பற்று

                                       தமிழ் பேசினால் அவமானம்


"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிமையானது       வேறொன்றும் இல்லை".      என்றான் பாரதி 


அப்படியானால் 


என் பாரதி காண விரும்பிய தமிழகம் இதுவா?. இன்றய தமிழனிடம்  மொழிப்பற்று இல்லை.
 ஏன்?  என்றோ அவன் ஜாதிப்பற்றில் கலந்து விட்டான் என்பதனால்.

        உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் தாய்ப்பால் போன்றது     அவரவரின் தாய்மொழி. 


       இந்த உலகின் மிக உயர்வான பண்புகளைக் கொண்ட இனம் நம் தமிழினம்.
தாய் மொழி, தமிழ் என்று இனத்தாலும் மொழியாலும் மட்டுமே அடயாளப் படுத்தி பெருமைப் படவேண்டிய நாம் அத்தகைய மொழியை பேசுவதற்கு தயங்குகிறோம்.


  மொழியைப் பற்றி தந்தை பெரியார் பேசிய போது  ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு தேவைப்படும் பற்றுகளுள் முதன்மையானது மொழிப்பற்றே ஆகும். அத்தகைய மொழிப்பற்று இல்லாதவனிடத்து தேசப்பற்றும் இருக்காது என்பது நிச்சயம். தேசம் என்பது மொழி அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆதலால் தமிழர்களுக்கு மொழிப்பற்று பெருக வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்றார்.   


ஒருவனின் கற்பனையில் உதிக்கும் எந்த ஒரு செயலும் சிறப்பாக வெளிப்படுத்தப் படுகிறதென்றால் அதற்கு ஒரே காரணம் அவன் தாய் மொழியில் சிந்திக்கிறான்.


நம் அன்றாட வாழ்க்கையில் பேசும் பேச்சில் உதிற்கும் சொற்கள் நம்மைப் பற்றி பிறருக்கு அறிமுகப் படுத்திவிடும். 
        
                     நம் சொற்களைக் கொண்டு
                     நம் உணர்ச்சிகள் மதிக்கப்படும்......


                     நம் உணர்ச்சிகள் கொண்டு 
                     நம்  செயல்கள் மதிக்கப்படும்........


                     நம் செயலைக் கொண்டு 
                     நம் வாழ்க்கை தீர்மாணிக்கப்படும்.


அத்தகய வாழ்க்கை நன்றாக இருக்க நாம் நமது தாய் மொழியில் சிந்திப்பதால் மட்டுமே சாத்தியப் படுகிறது.


நாம் நமது மனதிற்கு சரி எனப் படுவதை மட்டும் செய்வோம்.


     போற்றுவோர் போற்றட்டும் - புழுதி வாரி
     தூற்றுவோர் தூற்றட்டும்


     ஏற்றதோர் கருத்தினை எடுத்துரைப்பேன்
     எவன் வரினும் நில்லேன் அஞ்சேன்


என்ற் கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு செவி கொடுப்போம்.








உணர்வில் தமிழனாக இரு.      ஒற்றுமையில் இந்தியனாக இரு.........






           



ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

எங்கேயும் எப்போதும்...

எங்கேயும் எப்போதும்
திரைக்கதைக்கு பாக்யராஜ் தான் என்று நினைதுக்கொண்டிருக்கும் போது நான் இருக்கேன் என்று அறிமுகமாகிறார் இளம் இயக்குனர் சரவணன்.  
ஏ.ஆர்.முருகதாஷ் ன் உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஆகும் முதல் படம்.

 நம் வாழ்வில் அன்றாடம் நிகழும் விபத்தைப் பற்றிய செய்தியை அன்றாடம் செய்தித்தாளை படிப்பதோடு மட்டும் மறந்து விடுகிறோம். அந்த விபதிற்கு பின்னால் உயிர் இழந்த குடும்பங்களை நினைத்துப் பார்ப்பதில்லை இதை ஒரு செய்தியாக சொல்லாமல் அழகான இரண்டு காதல் ஜோடிகள் பயணம் செய்யும் பேருந்து மற்றும் சக பயணியாக இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்கள் மூலம் வேகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து நம்மை உழுக்கி எடுத்து விடுகிறார் இறுதிக்காட்சியில். 

 படத்தின் முதல் காட்சியே இரண்டு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொள்வதாக அமைத்து நம்மை திரை அரங்கின் இருக்கையில் ஃபெஃபிகால் போட்டு அமர்த்திவிடுகிறர். 

அதிலிருந்து ஃப்ளஷ்பேக் ல் செல்கிற்து திரைக்கதை.  ஃப்ளஷ்பேக் ல் இருந்து அடுத்து ஒரு ஃப்ளஷ்பேக் என்றாளும் நம்மை குழப்பாமல் தெளிவான திரைக்கதையுடன் ரசிக்க வைக்கிறார்.
 முதன் முதலாக சென்னைக்கு நேர்முகத் தேர்விற்கு வரும் அனன்யாவை அழைத்துப் போக வேண்டிய அக்கா வரமுடியாமல் போக அந்த பொறுப்பு சரவ் இடம் வந்து சேர்கிறது.

  சென்னையை பற்றிய பயத்தினாலும் அப்பாவித்தனமும்  அதிகாப்படியான முன் ஜாக்கிரதை கதாப்பாத்திரத்தில் முதலில் சரவ் மீது சந்தேகப்படுவாதகட்டும் கூட நடந்து போகும் போது அதற்குப் பின் மெல்ல காதல் வயப்படுவது அனைத்தயும் ரசிக்க வைக்கிறார். 
அனன்யாவின் செய்கைகள் சரவ்க்கு எரிச்சலைக் கொடுத்தாலும் இன்றய சென்னை ஐ டி பையனாக ரசிக்க வைக்கிறார். 

அடுத்து ஜெய்-அஞ்சலி.
 முகம் தெரியாமல் தூரத்தில் இருந்தே சைட் அடிக்கும் ஜெய் ரூம்ற்கு திடீர் என்று அது நான் தான் என்று ஆஜர் ஆகும்  முதல் காட்சியில் இருந்து ஜெய்யை அங்க போ இங்க வா என்று அழயவைத்து அலட்சியமாக இ லவ் யு சொல்லும் வரை நமக்கும் இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று ஏங்க வைக்கிறள். 
ஜெய் தனது அளவான நடிப்பில் அசத்தி இருக்கிறார். மற்றும் பேருந்தில் பயனம் செய்யும் இளம் தம்பதிகள், பயனத்தில் காதல் வளர்க்கும் இளஞ்ஜோடி. துபாய் ல் இருந்து தனது 5  வயது  குழந்தையை முதன் முதலில் பார்க்க வரும் தந்தை என் அனைவரும் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.  
படத்திற்கு திரைக்கதைக்கு இணையாக  இயல்பான வசனங்கள்  வேல்ராஜா வின் ஒளிப்பதிவும், சத்யா வின் இசையும் மிகப் பெரிய பலம்.  விபத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு தமிழ் படம் இது வரை வந்தது இல்லை.  எங்கேயும் எப்போதும் அது காதல் ஆனாலும்  சரி விபத்து ஆனலும் சரி.

புதன், செப்டம்பர் 21, 2011

முதல் பதிவு

என் பெயர் பாலாங்க சும்ம இல்லாம நானும் ஒரு வலைப்பதிவ தொடங்கிட்டேன். இப்ப நான் என்ன எழுதுரதுன்னு எனக்கெ தெரியாது.   எதாவது எழுதனும்னு நெனச்சாலும் எதுவும் தோனல.   சரி என்னோட முதல் காதல் கவிதை இங்க எழுதுறேன்.


என் காதலை உன்னிடம் 
சொல்லத்துடிக்கும்- என் மனதிற்கு
நீ
என்ன சொல்லிவிடுவாயோ -என்று
அச்சப்படுகிறது.