நிமிடத்தில் பார்த்துவிட்டு
நிதானம் கொள்ளும்
கண்கள்.....
மணியோசை எழுப்பிவிட்டு
மௌனமாய் ஆர்ப்பரிக்கும்
பாத கொலுசுகள்.....
புதிர் கவிதையை தந்துவிட்டு
புதைந்து போகும்
புன்னகை.......
ஜாடைப் பேச்சால் காதல்
ஜனனம் சொல்லும்
வார்த்தைகள்......
எல்லாம் உன்னிடத்தில்
எதிர்பார்ப்பு உன்னிடத்தில்.....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக