ஞாயிறு, ஜனவரி 01, 2012

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


      இந்த வருடம் நாம் எப்படி இருக்கப்போகிறோம் ?


கடந்த வருடங்களில் நிகழ்ந்த மகிழ்ச்சியான, அதிர்ச்சியான சம்பவங்களை நினைத்து புது வருடத்தின் முதல் நாளில் நம் எல்லோர் மனதிலும் கேட்டுக் கொள்கின்ற ஒரு கேள்வி இது.

 பன்னிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருடங்கள் மாறுவது போல், நமது எண்ணங்கள், கனவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.  இந்த வருடமாவது இந்த கனவுகள் நிறைவேறுமா அல்லது இதை நிறைவேற்ற எந்த விதமான முயற்ச்சிகள் எடுக்க வேண்டும் என  ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பமும் நம்மை புது மனிதனாக மாற்றிக்கொள்கிற சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

  ஆண்டுகள், கனவுகள் இவை இரண்டும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவே இல்லாத ஒரு பயணமாக நம் வாழ்வில் எதிபார்க்காத சிறிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு கடந்து செல்கின்றன.

  ஒவ்வொரு ஆண்டும் குளிர்,மழை,கோடை,வசந்தம் என இந்த நிகழ்வுகள் பன்னிரெண்டு மாதங்களாக வரயறுக்கப்பட்டு அதனுடய இயல்பை மீறாமல் அதற்கு உண்டான பலனை சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தந்துவிட்டு போகின்றன.

   அதேபோல் ஏமாற்றம்,வருத்தம்,கோபம்,மகிழ்சி இவை யாவும் நாம் காண்கின்ற கனவுகளை பொறுத்தும் அதை நிறைவேற்ற நாம் எடுத்துக்கொள்கின்ற முயற்சியைப் பொறுத்தும் அமைகின்றன. தோல்வி,ஏமாற்றம்,தடைகள், ஆகிய அனுபவத்தை நம்முடய விடாமுயற்சியால் வெற்றி காண்போம்.


நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..............

நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம்.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.............................

ஏன்றென்றும் அன்புடன்
பாலா

2 கருத்துகள்:

  1. இந்த வருடம் எல்லோருக்கும் சிறப்பாக அமைய மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன். அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்.
    சுந்தர்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பா

    என்றென்றும் நட்புடன்
    பாலா.

    பதிலளிநீக்கு